தமிழக அரசு துறைகளில் காலியாகவுள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள்.கொரோனா காரணமாக சென்ற 2 வருடங்களாக தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து தற்போது சென்ற 2 வருடங்களுக்கு பின் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 4 மற்றும் VAO தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. மேலும் குரூப்-4 தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிகொண்டு வருகின்றனர். இந்த தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் தற்போது வரை ஹால் டிக்கெட் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் உள்ள நிலையில் இந்த வாரம் ஹால் டிக்கெட் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகிறது.

அதனை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அட்மிட் கார் 2022 இன்னும் சில தினங்களில் வெளியிடப்படலாம் என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் டிஎன்சி குரூப் 4 ஹால் டிக்கெட் 2022 குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் தேர்வுக்கு தயாராக வரும் விண்ணப்பதாரர்கள் என்ற அதிகாரபூர்வமான tnpsc.gov.in இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டிஎன்பிசி குரூப் 4 அட்மிட் கார்டு 2022 பதிவிறக்கம் செய்ய விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர் மற்றும் பதவி எண்ணை கொடுத்து, அதன் பின் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். இந்த தேர்வானது காலை 9:30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறும். மேலும் 7138 பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்த தேர்விற்கு இதுவரை 22 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Post a Comment

Previous Post Next Post