7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!
கடந்த சில மாதங்களாக பணவீக்கம் பயங்கர வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இந்த மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது
சம்பள உயர்வு:

அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்களுக்கு பணவீக்கம், விலை ஏற்றத்தால் ஏற்படும் செலவுகளை சமாளிப்பதற்காக வழங்கப்படும் தொகையாகும். மேலும் ஜனவரி – ஜூன், ஜூலை – டிசம்பர் என அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. அதன்படி, ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமலாகிறது. இந்நிலையில் தற்போது ஜூலை மாதத்தில், மீண்டும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஊழியர்களுக்கான சம்பளம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி நிலுவைத்தொகை செட்டில்மெண்ட் என இரண்டு ஜாக்பாட் அறிவிப்புகளுக்காக மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் மிகுதியாக இருப்பதால் இந்த முறை அகவிலைப்படி 4% அல்லது 5% உயர்த்தப்படலாம் என அரசு ஊழியர்கள் கூறுகின்றனர்.மேலும் DA 5 சதவீதம் உயர்த்தப்பட்டால் DA எண்ணிக்கை தற்போதைய 34 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக உயரும். மத்திய அரசு ஊழியர்கள் பெறும் DA போலவே, மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களும் அவர்களின் அகவிலை நிவாரணத்தில் (DR) உயர்வை பெறுவார்கள்.

மேலும் DA 4 சதவீதம் உயர்த்தப்பட்டு, 38 சதவீதத்தை எட்டினால், அடிப்படை சம்பளம் ரூ.18,000 உள்ள ஊழியர்களுக்கு மாதம் ரூ.720 அல்லது ஆண்டுக்கு ரூ.8,640 ஆக சம்பளம் உயர்த்தப்படும். இதையடுத்து ரூ.50,000 அடிப்படைச் சம்பளம் உள்ளவர்களுக்கு ரூ.2,000 மாதாந்திர உயர்வை எதிர்பார்க்கலாம். இந்த DA உயர்வு 5 சதவீதமாக இருந்தால், இந்தத் தொகையானது ரூ.18,000 அடிப்படைச் சம்பளத்திற்கு மாதம் ரூ.900 ஆகவோ அல்லது ஆண்டுக்கு ரூ.10,800 ஆகவோ மாறும்.மேலும் ரூ.50,000 அடிப்படை சம்பளத்திற்கு ரூ.2,500 உயர்த்தி வழங்கப்படும்.

1 Comments

Post a Comment

Previous Post Next Post