TNTET: 5-ஆம் வகுப்பு சமூக அறிவியல் - பாடக்குறிப்புகள் (பருவம் 1, இயல் 2)
மானுடவியல் (Anthropology)
மனிதகுலத்தின் வளர்ச்சி மற்றும் வரலாற்றை ஆய்வு செய்யும் அறிவியல் பிரிவு மானுடவியல் எனப்படும்.
தொடக்க கால மனிதர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர்.
2. கற்காலத்தின் நிலைகள் (Stages of Stone Age)
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கற்காலத்தை மூன்று நிலைகளாகப் பிரிக்கின்றனர்:
பழைய கற்காலம் (Paloelithic Age): மனிதர்கள் வேட்டையாடுபவர்களாகவும், நாடோடிகளாகவும் வாழ்ந்தனர். சிக்கிமுக்கி கற்களைக் கொண்டு நெருப்பை உருவாக்கினர்.
இடைக்காலம் (Mesolithic Age): சிறிய மற்றும் கூர்மையான கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
புதிய கற்காலம் (Neolithic Age): மனிதன் சக்கரம் மற்றும் வேளாண்மையைக் கண்டறிந்த காலம். இது மனித வரலாற்றில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியது.
3. முக்கியக் கண்டுபிடிப்புகள்
நெருப்பு: சிக்கிமுக்கி கற்களை உரசுவதன் மூலம் நெருப்பை உருவாக்கினர். இது விலங்குகளிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கவும், உணவைச் சமைக்கவும் உதவியது.
சக்கரம்: மலையிலிருந்து கற்கள் உருண்டு விழுவதைப் பார்த்து சக்கரத்தை உருவாக்கினர். இது போக்குவரத்தையும், மண்பாண்டங்கள் செய்வதையும் எளிதாக்கியது.
வேளாண்மை: ஆற்றங்கரையோரம் தானியங்கள் தானாக வளர்வதைக் கண்ட மனிதன், திட்டமிட்டு விவசாயம் செய்யத் தொடங்கினான். இது அவனை ஓரிடத்தில் நிலையாகத் தங்க வைத்தது.
4. பாறை ஓவியங்கள் (Rock Paintings)
ஆதி மனிதர்கள் தாங்கள் வேட்டையாடிய நிகழ்வுகளைப் பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் ஓவியங்களாக வரைந்தனர்.
தமிழ்நாட்டில் நீலகிரி (கரிக்கையூர்), விழுப்புரம் (கீழ்வாலை) மற்றும் கோவை (வெள்ளெருக்கம்பாளையம்) ஆகிய இடங்களில் இத்தகைய ஓவியங்கள் உள்ளன.
5. பழங்காலத் தமிழகத்தின் தொல்பொருள் ஆய்விடங்கள்
ஆதிச்சநல்லூர்: தூத்துக்குடி மாவட்டம் (முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்ட இடம்).
அரிக்கமேடு: புதுச்சேரி அருகே (ரோமானியர்களுடன் வணிகம் செய்ததற்கான சான்றுகள்).
கீழடி: சிவகங்கை மாவட்டம் (வைகை ஆற்றங்கரையில் அமைந்த நகர நாகரிகம்).
முக்கிய வினா-விடை (TNTET மாதிரி)
மானுடவியல் என்ற சொல் எம்மொழியிலிருந்து உருவானது?
விடை: கிரேக்கம் (Anthropos - மனிதன், Logos - ஆய்வு).
ஆதி மனிதன் முதன்முதலில் பழக்கப்படுத்திய விலங்கு எது?
விடை: நாய் (பாதுகாப்பிற்காகவும், வேட்டையாடுவதற்காகவும்).
மனிதன் சக்கரத்தை எக்காலத்தில் கண்டறிந்தான்?
விடை: புதிய கற்காலம்.
இந்தியாவில் பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை ஓவியங்கள் எங்குள்ளன?
விடை: பீம்பேட்கா (மத்தியப் பிரதேசம்).
Post a Comment