TNTET: 5th Science - Study Notes (Term 1, Unit 2)

1. விலங்குகளின் இனப்பெருக்கம் (Reproduction in Animals)

  • விலங்குகள் தங்கள் சந்ததியினரை உருவாக்குவதற்கு மேற்கொள்ளும் செயல்பாடே இனப்பெருக்கம் ஆகும். இது இரண்டு வகைப்படும்:

    • பாலின இனப்பெருக்கம்: ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைந்து கருமுட்டை உருவாவது.

    • பாலிலா இனப்பெருக்கம்: ஆண், பெண் இனச்செல்கள் இணையாமல் ஒரே ஒரு பெற்றோர் மூலம் புதிய உயிரினம் உருவாவது (எ.கா: அமீபா - பிளவுறுதல், ஹைட்ரா - அரும்புதல்).

2. பாலூட்டிகள் (Mammals)

  • இவை குட்டி போட்டுப் பால் கொடுக்கும் விலங்குகள்.

  • பாலூட்டிகளில் பிளாட்டிபஸ் மற்றும் எச்சிட்னா ஆகிய இரண்டு மட்டும் முட்டையிடும் பாலூட்டிகள் ஆகும்.

  • நீலத் திமிங்கிலம் உலகின் மிகப்பெரிய பாலூட்டி ஆகும்.

3. அழியும் நிலையில் உள்ள விலங்குகள் (Endangered Species)

  • ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த விலங்குகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தால், அவை அழியும் நிலையில் உள்ள விலங்குகள் எனப்படும்.

  • காரணங்கள்: காடுகளை அழித்தல், வேட்டையாடுதல், மாசுப்பாடு மற்றும் காலநிலை மாற்றம்.

  • இந்தியாவில் அழியும் நிலையில் உள்ள சில விலங்குகள்: ஆசிய சிங்கம், வங்கப் புலி, பனிச்சிறுத்தை, நீலகிரி வரையாடு.

4. வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்கள்

  • தேசியப் பூங்கா: விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பாதுகாக்க அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இடம் (எ.கா: ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா - உத்தராகண்ட்).

  • வனவிலங்கு சரணாலயம்: விலங்குகளை மட்டும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட இடம் (எ.கா: முதுமலை சரணாலயம் - தமிழ்நாடு).

  • முக்கியத் தகவல்கள்:

    • இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா - ஜிம் கார்பெட் (1936).

    • ப்ராஜெக்ட் டைகர் (Project Tiger): புலிகளைப் பாதுகாக்க 1973-ல் தொடங்கப்பட்டது.

5. ப்ளூ கிராஸ் (Blue Cross)

  • இது விலங்குகளின் நலனுக்காகத் தொடங்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பு.

  • இந்தியாவில் 1959-ல் கேப்டன் வி. சுந்தரம் என்பவரால் சென்னையில் தொடங்கப்பட்டது.

Post a Comment

أحدث أقدم