TET Quiz - 5th Std Science Unit 2 - Zeal Study

TNTET அறிவியல் மாதிரித் தேர்வு

5-ஆம் வகுப்பு | பருவம் 1 | இயல் 2: விலங்குகள் (15 வினாக்கள்)

1. உயிரினங்கள் தங்களைப் போன்ற பிற உயிரினங்களை உருவாக்கும் செயல்முறை?

விடை: இனப்பெருக்கம்.

2. அமீபா எந்த முறையின் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது?

விடை: பிளவுறுதல் (Binary Fission).

3. முட்டையிடும் பாலூட்டிக்கு ஓர் எடுத்துக்காட்டு?

விடை: பிளாட்டிபஸ் (மற்றும் எச்சிட்னா).

4. உலகின் மிகப்பெரிய பாலூட்டி எது?

விடை: நீலத் திமிங்கிலம்.

5. இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா எது?

விடை: ஜிம் கார்பெட் (1936).

6. 'புலிகள் பாதுகாப்புத் திட்டம்' தொடங்கப்பட்ட ஆண்டு?

விடை: 1973.

7. ஹைட்ரா எந்த முறையில் இனப்பெருக்கம் செய்கிறது?

விடை: அரும்புதல் (Budding).

8. அழியும் நிலையிலுள்ள விலங்குகளைப் பாதுகாக்கும் இடம்?

விடை: தேசியப் பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள்.

9. ப்ளூ கிராஸ் (Blue Cross) இந்தியாவில் எங்கு தொடங்கப்பட்டது?

விடை: சென்னை (1959).

10. தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?

விடை: நீலகிரி வரையாடு.

11. ஒற்றை பெற்றோர் மூலம் புதிய உயிரினம் உருவாவது ________ இனப்பெருக்கம்.

விடை: பாலிலா இனப்பெருக்கம்.

12. ஒரு குறிப்பிட்ட இன விலங்குகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தால் அவை ________.

விடை: அழியும் நிலையிலுள்ள விலங்குகள்.

13. இந்தியாவின் தேசிய விலங்கு எது?

விடை: புலி.

14. ப்ளூ கிராஸ் அமைப்பை சென்னையில் தொடங்கியவர் யார்?

விடை: கேப்டன் வி. சுந்தரம்.

15. எது விலங்குகளின் புகலிடம் என்று அழைக்கப்படுகிறது?

விடை: வனவிலங்கு சரணாலயம்.

Post a Comment

أحدث أقدم